ஐம்மு காஷ்மீரில் கார் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸிலிருந்து காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்திற்கு இன்று காலை ஒரு குடும்பம் சென்று கொண்டிருந்தது. அப்போது மன்சார் அருகே சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சுமார் 200 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளனர்.
இறந்தவர்கள் குல்சார் அகமது பட், அவரது மனைவி ஜாரா பேகம், அவர்களது மகன் முகமது இக்பால் மற்றும் மகள் மஸ்ரத் என அடையாளம் காணப்பட்டது. இறந்தவர்களில் ஒருவரை அடையாளம் காண முடியவில்லை என காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் கார் ஓட்டுநர் சாகீப் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்தனர். படுகாயமடைந்த கார் ஓட்டுநரை மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர்.
அதனைதொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.